பொது

சிலாங்கூரில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 630 கோடி ரிங்கிட்டை ஒதுக்கீடு

19/08/2022 07:14 PM

ஷா ஆலாம், 19 ஆகஸ்ட் (பெர்னாமா) -- சிலாங்கூரில் உள்கட்டமைப்பு மற்றும் சேவைக்கான வசதிகளை மேம்படுத்த, 12-ஆவது மலேசியத் திட்ட, 2022-ஆம் ஆண்டு இரண்டாவது திட்டத்தின் கீழ், அரசாங்கம் 630 கோடி ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்துள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

சிலாங்கூரில் வெள்ளத்தைக் குறைக்கும் ஐந்து திட்டங்களும், அரசாங்கம் மேற்கொள்ளவிருக்கும் முக்கிய திட்டங்களில் அடங்கும் என்று அவர் கூறினார்.

புதிய அணுகுமுறையை திட்டமிடுவது அதாவது சிலாங்கூரில், தகுந்த, நிலையான, முழுமையான வசதிகளை ஏற்படுத்துவது உட்பட அரசாங்கம் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)