அரசியல்

நோர்ஹிசாம் நம்பிக்கை கூட்டணி வேட்பாளராக களமிறக்கப்படமாட்டார்

22/10/2021 04:42 PM

மலாக்கா, 22 அக்டோபர் (பெர்னாமா) -- மாநில தேர்தலில் டத்தோ நோர்ஹிசாம் ஹசான் பக்தீ வேட்பாளராக களமிறக்கப்படமாட்டார் என்று நம்பிக்கை கூட்டணி முடிவு செய்திருக்கிறது.

கெஅடிலான் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், அமானா தலைவர் முகமட் சாபு, ஜ.செ.காவின் செயலாளர் லிம் குவான் எங், மற்றும் உப்கோ தலைவர் டத்தோ ஶ்ரீ மடியூஸ் தங்காவ் ஆகியோர் பங்கேற்ற நம்பிக்கை கூட்டணி தலைவர் மன்றத்தில் வியாழக்கிழமை இரவு இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

நம்பிக்கை கூட்டணியின் எந்த ஓர் உறுப்பு கட்சியிலும் அவர்கள் உறுப்பினர் இல்லை என்பதோடு அனைத்து தரப்பின் கருத்துக்களையும் ஏற்றுக்கொண்டப் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிக்கை ஒன்றின் வழி அவர்கள் குறிப்பிட்டனர்.

இதனிடையே, மலாக்கா மாநில தேர்தலில், அட்லி சஹாரி தலைமையில் நம்பிக்கை கூட்டணி கேந்திரம் செயல்படுவதற்கும் அதன் தலைவர் மன்றத்தில் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)]