BREAKING NEWS   Former inspector general of police (IGP) Tun Mohammed Hanif Omar died at 2.15 am today - Son | Bekas Ketua Polis Negara (KPN) Tun Mohammed Hanif Omar meninggal dunia pada 2.15 pagi tadi - Anak | 
சிறப்புச் செய்தி

மோட்டார் சைக்கிளோட்டிகளின் அலட்சிய போக்கினால், நாட்டில் அதிகமான சாலை விபத்துகள் பதிவு

18/10/2021 08:09 PM

கோலாலம்பூர், 18 அக்டோபர் (பெர்னாமா) -- சாலை விதிகளை மதிப்போம்! வரும் இன்னல்களை தவிர்ப்போம்! இவ்வாறான பல வாசகங்களை நாம் சாலையோரங்களில் பார்த்தாலும், பல நேரங்களில், அதனை செயல்படுத்த மறுத்தும், மறந்தும் விடுகின்றோம்.

குறிப்பாக, மோட்டார் சைக்கிளோட்டிகளின் அலட்சிய போக்கினால், நாட்டில் அதிகமான சாலை விபத்துகள் பதிவு செய்யப்படுவதாக, பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

மலேசியாவில் ஏற்படும் சாலை விபத்துக்களில், 67.29 விழுக்காடு மோட்டார் சைக்கிள் ஓட்டிகளால் ஏற்படுகின்றன.

கடந்த 2013-ஆம் ஆண்டு, உலக அளவில் நிகழ்ந்த மோட்டார் சைக்கிள் விபத்து சம்பவங்களில், மலேசியா 5-ஆவது இடத்தில் இருந்ததாக, மலேசிய சாலை பாதுகாப்பு ஆய்வுக் கழகம், மைரோஸ் தெரிவித்திருந்தது.

அலட்சிய போக்கே, சாலை விபத்துக்கள் அதிகரிக்க முக்கிய காரணமாக அமைவதாக  பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி அதிகாரி என்.வி. சுப்பாராவ் கூறுகிறார்.

''மலேசியவில் சைக்கிள் ஓட்டிகளின் அஜாகரதை மற்றும் பொருப்பற்ற செயல் காரணமாக அதிகமான விபத்துகள் ஏற்படுகின்றன. அதிவேகத்தில் செல்பவர்கள் போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றுவது கிடையாது. இதனால் அவர்களுக்கும், மற்ற வாகன ஓட்டிகளும் பிரச்சனை ஏற்படுகிறது,'' என்று அவர் கூறினார்.

சாலை விபத்துகளை கட்டுப்படுத்துவதற்கு, பல ஆய்வுகளும் முயற்சிகளும் மேற்கொண்ட போதிலும், மோட்டார் சைக்கிள்களை உட்படுத்திய உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருக்கின்றன. 

மோட்டார் சைக்கிள்களை உட்படுத்தி 58 விழுக்காடு உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகி வந்த வேளையில், கடந்தாண்டில் இது  67.29 விழுக்காடாக அதிகரித்திருக்கிறது.

அவற்றில், 16 முதல் 25 வயதுக்குட்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களே, உயிரிழக்கவும், கடுமையான காயங்கள் மற்றும் சிறிய காயங்களுக்கு ஆளாகுவதாகவும், மைரோஸ் தெரிவித்துள்ளது.

அதே வேளையில், அண்மைய காலமாக, உணவு விநியோக சேவையில் ஈடுபடும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களை உட்படுத்திய சாலை விபத்துகள்  அதிகரித்திருப்பதாக சுப்பாராவ் குறிப்பிட்டார்.

''அதிக வேகம் உயிரை கொல்லும் என்பார்கள். எனவே, வேகமாக மோட்டாரில் செல்வதால் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் மற்றும் சாலைகளில் செல்லும் இதர வாகன ஓட்டுபவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்,'' என்று அவர் கூறினார்.

சாலை விதிகள் முறையாக கடைபித்து, தனது பாதுகாப்பு மட்டும் இன்றி இதர வாகனமோட்டிகளின் பாதுக்காப்பிற்கும் மோட்டார் சைக்கிளோட்டிகள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று சுப்பாராவ் கேட்டுக் கொண்டார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)]