கோலாலம்பூர், 27 செப்டம்பர் (பெர்னாமா) -- தொழிலாளர் சந்தையில் பொருத்தமில்லாத விவகாரத்தைக் கையாளுவதற்கு, அரசாங்கம் 2021-ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டு வரையில் பட்டதாரிகளை சந்தைப்படுத்தலுக்கான வியூக திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
தொழில்துறைக்குத் தேவைப்படும் உயர் திறன் கொண்ட ஆள்பலத்தை தயார்ப்படுத்துவதற்கு, 2021-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரையிலான வேலை உருவாக்கத்திற்கான வியூக திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி கூறினார்.
''கொவிட்-19 பெருந்தொற்று அந்நிய நாட்டினரைச் சார்ந்திருக்கும் சில பொருளாதார துறைகளுக்கு குறிப்பாக, கட்டுமானம் மற்றும் தோட்டத் தொழில் துறை, அந்நிய நாட்டினரை பணிக்கு அமர்த்தும் நடவடிக்கை முடக்கப்படிருப்பதால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது,'' என்று அவர் தெரிவித்தார்.
அந்நிய தொழிலாளர்கள் பிரச்சனையைக் கையாளுவதற்கு, தொழில்துறை, உற்பத்தி செயல்முறையில் இயந்திரமயமாக்கல் மற்றும் தன்னியக்க முறையை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
எதிர்காலத்தில் ஆள்பலத்தில் அந்நிய தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கை 15 விழுக்காட்டிற்கு மேற்போகாத வரம் நிர்ணயிக்கப்படும் என்றும் அவர் தெளிவுப்படுத்தினார்.
வளமான, நிலையான, மற்றும் முழுமையான மலேசிய குடும்பம் என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு, 2021 முதல் 2025-ஆம் ஆண்டு வரையிலான 12-வது மலேசியத் திட்டத்தை, பிரதமர் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)]
© 2024 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை