உலகம்

ரஷ்யா: பல்கலைக்கழகம் ஒன்றில் மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் எண்மர் பலி

20/09/2021 06:01 PM

பெர்ம், 20 செப்டம்பர் (பெர்னாமா) -- ரஷ்யாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் 18 வயதுடைய மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் எண்மர் உயிரிழந்திருக்கின்றனர்.

பின்னர், அம்மாணவர் தம்மைத் தாமே சுட்டு தற்கொலைச் செய்து கொண்டார்.

மாணவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, ஜன்னல்கள் வழியாகக் கீழே குதித்ததால், பலர் காயமடைந்திருக்கின்றனர்.

முன்னதாக, சம்பந்தப்பட்ட மாணவர், வித்தியாசமான உடை, தலையில் கவசம் அணிந்து, கையில் துப்பாக்கியைப் பிடித்திருக்கும் புகைப் படம் ஒன்றை தமது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்திருந்தார்.

அவர் அந்நடவடிக்கை அரசியல் அல்லது மதக் கொள்கையுடன் தொடர்பில்லை என்று போலீஸ் தரப்பு கூறியிருக்கிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)