BREAKING NEWS   Former inspector general of police (IGP) Tun Mohammed Hanif Omar died at 2.15 am today - Son | Bekas Ketua Polis Negara (KPN) Tun Mohammed Hanif Omar meninggal dunia pada 2.15 pagi tadi - Anak | 
பொது

கொவிட்-19 தேசிய தடுப்பூசி திட்டத்தின் நான்காம் கட்டம் தொடக்கம்

14/06/2021 05:41 PM

புத்ராஜெயா, 14 ஜூன் (பெர்னாமா) -- நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு, பி.கே.பி அமலாக்கத்தின் போது செயல்பட்ட தொழில்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அரசாங்கம் தொடங்கியிருக்கிறது.

இது, கொவிட்-19 தேசிய தடுப்பூசி திட்டத்தின் நான்காம் கட்டத்தை உட்படுத்தியதாகும்.

இதன் தொடர்பில், அனைத்துலக வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சு நிர்வகிக்கும் தடுப்பூசி செலுத்தும் மையத்தில் புதன்கிழமை தொடங்கி தடுப்பூசி செலுத்திக்  கொள்ளலாம் என்று கொவிட்-19 தேசிய தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்திருக்கிறார்.

கொவிட்-19 தடுப்பூசி விநியோகிப்பு உத்தரவாத சிறப்பு செயற்குழுவான,JKJAV,-வின் முடிவினால், இந்த நான்காம் கட்டம் செயல்படுத்த தொடங்கியிருப்பதாக அவர் தெளிவுப்படுத்தினார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையாக விளங்குவதால் பொருளாதார துறை, இக்கட்டத்தில் உட்படுத்தப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

''ஆகையால் இவ்வாரம் நாம் சில தொழில்துறைகளுடன் தொடங்கவிருக்கிறோம். மித்தி நிர்வகிக்கக் கூடிய பிபிவி ஒன்று திறக்கப்படும் குறிப்பாக வர்த்தக துறைக்கு. அதன் பின்னர் கட்டுமான துறை, விவசாயம், மொத்த விற்பனை துறை, மருத்துவத் துறை உள்ளிட்ட இதர துறைகளுக்கும் பிபிவி திறக்கப்படும்,'' என்று அவர் தெரிவித்தார்.

இதற்காக இம்மாதம் 30 ஆயிரம் தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

இதனிடையே, ஜப்பான், தோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் செய்தி சேகரிக்கச் செல்லும் ஊடகலாவியர்களுக்கு இன்று தொடங்கி தடுப்பூசி செலுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

''தோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு செய்தி சேகரிக்கச் செல்லும் 47 உள்நாடு மற்றும் அனைத்துலக ஊடகவியலாளர்களில் 38 பேருக்கு இன்று முதல் தடுப்பூசி செலுத்த நாங்கள் தொடங்கியிருக்கிறோம்,'' கைரி குறிப்பிட்டார்.

திங்கட்கிழமை, சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அடாம் பாபாவுடன் இயங்கலை வாயிலாக நடத்தப்பட்ட கொவிட்-19 தேசிய தடுப்பூசி திட்டம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)]