பொது

BPR விண்ணப்பத்தின் மேல்முறையீடு; ஜூன் 30-ஆம் தேதி வரை மேற்கொள்ளலாம்

13/06/2021 07:52 PM

புத்ராஜெயா, 13 ஜூன் (பெர்னாமா) -- பரிவுமிக்க உதவித் தொகை BPR விண்ணப்பத்தின் மேல்முறையீட்டை ஜூன் 15-ஆம் முதல் 30-ஆம் தேதி வரை மேற்கொள்ளலாம்.

BPR விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுவதாக நிதி அமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ரூல் அப்துல் அசிஸ் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், சிலர் BPR உதவித் தொகை பெறுவதற்குத் தகுதி இருந்தும், அரசாங்க தரவுத்தளத்தில் பதிவு செய்யப்படாமல் இருக்கலாம் என்பதை அரசாங்கம் உணர்ந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

எனவே, சம்பந்தப்பட்டவர்கள் தங்களின் விண்ணப்பத்தையும் அதன் தொடர்புடைய ஆவணங்களையும்  உள்நாட்டு வருமான வரி வாரியத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

BPR  மேல்முறையீட்டில் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள், மே 31-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட  PEMERKASA PLUS திட்டத்தின் கீழ், கூடுதல் உதவித் தொகையைப் பெறத் தகுதியுடையவர்கள் என்றும் தெங்கு சஃப்ரூல் தெரிவித்தார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)]