பொது

'கேங் நந்தகுமார்' பிடிபட்டது

04/05/2021 09:46 PM

ஈப்போ, 4 மே (பெர்னாமா)-- கடந்த நான்கு ஆண்டுகளாக ஈப்போ சுற்றுவட்டாரத்தில் வழிபறிக் கொள்ளை, வீடு புகுந்து திருடுவது உட்பட பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 'கேங் நந்தகுமார்' கும்பலைச் சேர்ந்த எழுவர் பிடிப்பட்டனர்.

கடந்த மே 9-ஆம் தேதி அங்கு நடத்தப்பட்ட OP FULICA  சோதனை நடவடிக்கையில்  23 முதல் 38 வயதுக்குட்பட்ட அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட அவர்கள் அனைவரும் ஈப்போ, சுங்கை சிப்புட் ஆகிய வட்டாரங்கள் மட்டுமின்றி பினாங்கிலும் கைது செய்யப்பட்டதாக பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ மியோர் ஃபாரிடாலாத்ராஷ் வாஹிட் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர்கள் மீது போதைப் பொருள் உட்பட கடுமையான குற்றங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கி 2020ஆம் ஆண்டு வரையில் வீடு புகுந்து திருடும் பல்வேறு சம்பவங்களில் இந்தக் கொள்ளைக் கும்பல் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

-- பெர்னாமா