சின்ஜியாங், 11 மார்ச் (பெர்னாமா) -- சீனா, சின்ஜியாங்கில் உள்ள நிலக்கரிச் சுரங்க பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அங்கே பணிபுரியும் ஊழியர்கள் அகப்பட்டுக் கொண்டனர்.
இதுவரை எட்டு சுரங்க ஊழியர்கள் காப்பாற்றப்பட்டிருப்பதுடன், சுரங்கத்தினுள் மேலும் 21 பேர் அகப்பட்டுக் கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த 21 பேரில் 12 பேரின் இடம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் ஒன்பது பேரின் நிலைமை குறித்த தகவல்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை.
அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வெள்ளம் ஏற்பட்டிருப்பதால், சுரங்க பகுதியில் மின்சார துண்டிப்பும் ஏற்பட்டிருக்கிறது.
-- பெர்னாமா
© 2024 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை