BREAKING NEWS | Former inspector general of police (IGP) Tun Mohammed Hanif Omar died at 2.15 am today - Son | Bekas Ketua Polis Negara (KPN) Tun Mohammed Hanif Omar meninggal dunia pada 2.15 pagi tadi - Anak | |
ஜகார்த்தா, 11 ஏப்ரல் (பெர்னாமா) -- மத்திய இந்தோனேசியாவில் உள்ள கிழக்கு ஜாவா மாகாணத்தின் கடற்கரையோர பகுதியருகே நேற்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் எழுவர் பலியாகி இருக்கின்றனர்.
மேலும், ஒருவர் காயமடைந்திருப்பதாக அந்நாட்டு தேசிய பேரிடர் நிர்வாக கழகம் தகவல் வெளியிட்டிருக்கிறது.
ரிக்டர் அளவைக் கருவியில் 6.0-ஆக பதிவாகியிருந்த இந்நிலநடுக்கம் மலாங் நகருக்கு தென்மேற்குப் பகுதியில் 45 கிலோமீட்டர் தூரத்தில் ஏற்பட்டிருந்தது.
இந்த நிலச்சரிவு சுனாமிக்கு வித்திடவில்லை என்றாலும், நிலச்சரிவு ஏற்படக்கூடிய பாறைகள் அமைந்த பகுதிகள் அருகே வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
கடந்த 2018-ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் 300 பேர் உயிரிழந்திருந்தனர்.
-- பெர்னாமா
© 2024 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை