நிலாய், 10 ஏப்ரல் (பெர்னாமா) -- நேற்றிரவு நடைபெற்ற மலேசிய லீக் ஆட்டத்தில் 1-2 என்ற கோல் எண்ணிக்கையில், திரங்கானு ஃப்சியிடம் கெடா ஃப்சி தனது சொந்த அரங்கிலேயே தோல்வி கண்டிருக்கிறது.
இதன் மூலம், சுப்பர் லீக் புள்ளிப் பட்டியலில் JDT-யை முந்திச் செல்லும் வாய்ப்பை, கெடா ஃப்சி நழுவ விட்டிருக்கிறது.
ஆட்டம் தொடங்கியது முதலே, இவ்விரு அணிகளும் தங்களின் சிறந்த ஆட்டத்திறனை வெளிப்படுத்தி, கோல் போடும் முயற்சியில் ஈடுப்பட்டன.
இந்நிலையில் ஆட்டத்தின் 40-வது நிமிடத்தில் கெடா ஃப்சியின் ஆட்டக்காரர் ரபி அதாயா தட்டிக் கொடுத்தப் பந்தை, தடுக்க வேண்டிய திரங்கானு ஃப்சியின் ஆட்டக்காரர் முஹமட் ஃபௌட்சி தவறுதலாக கெடாஃப்சிக்கான முதல் கோலாக்கினார்.
அக்கோல் போட்டப்பட்ட சில நிமிடங்களிலேயே, திரங்கானு ஃப்சிக்கான முதல் கோலை பெனால்டி மூலம், டெவிட் டா சில்வா போட்டார்.
அதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 59-வது நிமிடத்தில், முஹமாட் அசாம் அஸ்மி முராட் மூலம், திரங்கானு ஃப்சிக்கான வெற்றிக் கோல் போட்டப்பட்டது.
ஆட்டம் 1-2 என்ற நிலையில் நிறைவடைந்த வேளையில், சுப்பர் லீக் புள்ளிப்பட்டியலில் 16 புள்ளிகளுடன் இரண்டாம் நிலையில் கெடா ஃப்சியும், 15 புள்ளிகளுடன் திரங்கானு FC மூன்றாம் நிலையில் இருக்கிறது.
-- பெர்னாமா
© 2024 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை