விளையாட்டு

செல்சியின் புதிய நிர்வாகி தோமஸ் துஷெல்

27/01/2021 08:08 PM

லண்டன், 27 ஜனவரி (பெர்னாமா) -- இங்கிலாந்து, செல்சியின் புதிய நிர்வாகியாகி இருக்கும் தோமஸ் துஷெல் (THOMAS TUCHEL) தமது பணியை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளார். 

பி.எஸ்.ஜியின் முன்னாள் பயிற்றுனருமான இவர், 18 மாத கால ஒப்பந்த அடிப்படையில் செல்சியில் இணைந்திருக்கிறார். 47 வயதுடைய தோமஸ் துஷெல் பயிற்சிகள் வழங்க தயாராகிவிட்ட நிலையில், செல்சியின் வெற்றியை உறுதி செய்யும் இலக்கிற்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

சிறந்த விளையாட்டாளர்களைக் கொண்டிருக்கும் செல்சி, அண்மையக் காலமாக இங்கிலாந்து பிரிமியர் லீக் ஆட்டங்களில் பின்னடைச் சந்தித்து வந்தது.

ஆதலால், அதன் முன்னாள் ஆட்டக்காரரும் பயிற்றுனருமான ப்ரான்க் லம்பார்ட் சில நாட்களுக்கு முன்னர், அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டு தோமஸ் துஷெல் புதிய நிர்வாகியாக பொறுப்பேற்றிருக்கிறார்.

==================

இதனிடையே, இங்லீஷ் பிரிமியர் லீக் கிண்ண ஆட்டத்தில், மென்செஸ்டர் சிட்டி,  5-0 என்ற கோல்களில்,வெஸ்ட் ப்ரோமை அதன் சொந்த அரங்கில் தோற்கடித்து, புள்ளிப்பட்டியலில் முதல் இடைத்தைப் பிடித்திருக்கிறது.

ஆட்டம் தொடங்கிய ஆறாவது நிமிடத்திலிருந்து, 57-வது நிமிடம் வரை, அதன் அதிரடி கோல் வேட்டையில், வெஸ்ட் ப்ரோமை திக்கு முக்காடிப் போனது.

==================

கூடைப்பந்து விளையாட்டில் உலகப் புகழ்ப்பெற்றிருந்த கோபே பிராயன் மரணம் அடைந்து ஆர் ஆண்டு நிறைடைந்துள்ளது.

அந்நாளை நினைவும் கூறும் வகையில், அமெரிக்கா லாஸ் எஞ்சல்ஸ்சின் விளையாட்டு அரங்கில், விளையாட்டாளர்கள் ஒன்று கூடி சிறப்பு பிரார்த்தனையை மேற்கொண்டனர்.
கடந்த ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி, கோபா மற்றும் அவரது மகள் உட்பட விளையாட்டாளர்கள் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளானது.

 

--பெர்னாமா