கோலாலம்பூர், 14 ஜனவரி (பெர்னாமா) -- அமல்படுத்தப்பட்டுள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு பி.கே.பி., மற்றும் அவசரகால நிலை குறித்துத் தொழில் முனைவர்கள் கவலை கொள்ள வேண்டாம் என்று கே.எல்.எஸ்.ஐ.சி.சி.ஐ. எனப்படும் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் டத்தோ ஆர்.ராமநாதன் தெரிவித்துள்ளார்.
இந்நடவடிக்கையானது நாட்டின் அரசியல் நிலைத்தன்மை சீராக இருப்பதுடன் பொருளாதாரம் மற்றும் மக்களின் சுகாதாரம் மீது அரசாங்கம் மிகுந்த அக்கறை கொண்டிருப்பதைப் பிரதிபலிப்பதாக ராமநாதன் கூறுகின்றார்.
பி.கே.பி. மீண்டும் அமல்படுத்துவது குறித்துத் தாங்கள் உட்பட பல தரப்பினர் அரசாங்கத்திடம் எதிர்ப்புத் தெரிவித்ததாக டத்தோ ஆர்.ராமநாதன் கூறினார்.
இருப்பினும், புதிய கொவிட்-19 நோய்ச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியதைத் தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இம்முறை பொது வர்த்தக துறைக்குச் சற்றுத் தளர்வுகள் வழங்கப்பட்டிருப்பதாக ஆறுதல் அளிப்பதால் பொருளாதாரத்தை மீட்சி பெற செய்ய உதவும் தொழில் முனைவர்களுக்கு அரசாங்கம் உதவ வேண்டும் என்றும் ராமநாதன் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே, வரும் பிப்ரவரி மாதம் இறுதியில் நாடு தடுப்பூசியைப் பெறும் நிலையில் அனைவரும் எஸ்.ஓ.பி.யைத் தொடர்ந்து பின்பற்றுமாறு அவர் வலியுறுத்தினார்.
இதனால், கொவிட்-19 நோய்ச் சம்பவங்களைக் குறைத்து, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதுடன் வர்த்தகத்தையும் மேம்படுத்த முடியும் என்று ராமநாதன் நம்பிக்கை தெரிவித்தார்.
-- பெர்னாமா
எங்களைப் பற்றி
Malaysian National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia
Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk[at]bernama.com, tamil[at]bernama.com
பிரிவுகள்
• பொது
• அரசியல்
• உலகம்
• சிறப்புச் செய்தி
• விளையாட்டு
காப்புரிமை