பொது

நாட்டில் ஆறு புதிய கொவிட்-19 திரள்கள் பதிவு

26/11/2020 09:01 PM

புத்ராஜெயா, 26 நவம்பர் (பெர்னாமா) -- இன்று ஆறு புதிய கொவிட்-19 திரள்கள் பதிவாகியிருப்பதாக சுகாதார தலைமை இயக்குநர் டான் ஶ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் தெரிவித்துள்ளார். இதனிடையே, துகுசான் மற்றும் செரி காயா ஆகிய திரள்கள் இன்று நிறைவடைந்துள்ளன.   

இந்நிலையில், 173 திரள்கள் நடப்பில் இருப்பது இன்றைய கண்காணிப்பில் தெரிய வந்துள்ளதாகவும் அதில் 44 திரள்களில் நோய் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பக்தி திரளை உட்படுத்தி 95 நோய் சம்பவங்களும், செர்காஸ் திரளை உட்படுத்தி 48 நோய் சம்பவங்களும், எங்கோர் திரளை உட்படுத்தி 43 நோய் சம்பவங்களும் அதிகரித்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

இன்று பதிவான 6 புதிய திரள்களில் 2 சபா, தாவாவில் போட் பீரோ மற்றும் புளோக் 31 திரள்களாகும்.

இதனிடையே, ஜோகூர் பாருவில் தளவாட நிறுவனத்தை உட்படுத்தி கெமிலாங் திரள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசத்தில், கெப்போங் மாவட்டத்தில் கட்டுமானப் பணியாளர்களை உட்படுத்தி தாபாக் பினா சுங்கை ஊடாங் திரள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

கிளாந்தானில் கோத்தா பாரு மற்றும் மாசாங் மாவட்டங்களில் செங்கால் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

பினாங்கு வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளும் கெடா பாராங் தெராப்பைச் சம்பந்தப்படுத்தி டாமார் லாவுட் திரள் அடையாளம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

-- பெர்னாமா