பொது

நாட்டில் 935 புதிய கொவிட்-19 சம்பவங்கள் பதிவு

26/11/2020 09:03 PM

புத்ராஜெயா, 26 நவம்பர் (பெர்னாமா) -- நாட்டில் இன்று 935 புதிய கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகி இருக்கின்றன.

இதனால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 60, 752 ஆக பதிவாகி இருப்பதாக சுகாதாரத் தலைமை இயக்குநர் டான் ஶ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்திருக்கிறார்.

இன்று பதிவு செய்யப்பட்ட புதிய சம்பவங்களில், 931 சம்பவங்கள் உள்நாட்டில் பரவியது என்றும் எஞ்சிய 4 சம்பவங்கள் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்களை உட்படுத்தியது என்றும் டான் ஶ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் தெரிவித்தார்.

அதோடு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வரும் 110 பேரில், 45 பேருக்கு சுவாச உதவிக் கருவி பொருத்தப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், இன்று மூவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்திருக்கின்றனர்.

அதே வேளையில், இன்று சபா, ஜோகூர், பினாங்கு மற்றும் கிளந்தான் ஆகிய மாநிலங்களில் மேலும் ஆறு திரள்கள் பதிவாகி இருக்கின்றன.

--பெர்னாமா