பொது

கொவிட்-19: 1,884 புதிய சம்பவங்கள் பதிவு

23/11/2020 07:46 PM

புத்ராஜெயா, 23 நவம்பர் (பெர்னாமா) -- நாட்டில், கொவிட்-19 பெருந்தொற்று பரவத் தொடங்கியது முதல், முதல் முறையாக மிக அதிகமான புதிய சம்பவங்கள் பதிவாகி இருக்கின்றன.

நாட்டில் இந்நோய்க் கண்டவர்களின் எண்ணிக்கை நான்கு இலக்கமாக பதிவாகத் தொடங்கிய நிலையில், இன்று நண்பகல் 12 மணி வரையில் மிக அதிகமாக அதாவது 1,884 சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத் தலைமை இயக்குநர் டான் ஶ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்திருக்கிறார்.

இன்று, புத்ராஜெயாவில் நடைபெற்ற கொவிட்-19 தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இன்று 1,884 சம்பவங்கள் பதிவாகியதைத் தொடர்ந்து நாட்டில் இந்நோய்க் கண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 56, 659-ஆக அதிகரித்து இருக்கிறது.

அதில், 1,882 சம்பவங்கள் உள்நாட்டில் பரவியது என்றும் எஞ்சிய 2 சம்பவங்கள் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவர்களை உட்படுத்தியது என்றும் டாக்டர் நோர் ஹிஷாம் குறிப்பிட்டார்.

அதோடு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வரும் 115 பேரில், 48 பேருக்கு சுவாச உதவிக் கருவி பொருத்தப்பட்டிருக்கிறது.

நாட்டில், இன்று மேலும் நான்கு திரள்கள் பதிவாகி இருப்பதையும் சுகாதார அமைச்சு அடையாளம் கண்டிருக்கிறது.

-- பெர்னாமா