விளையாட்டு

ஏ.டி.பி தொடர் டென்னிஸ் போட்டி: ஜோக்கோவிச், நடால் அதிர்ச்சி தோல்வி

22/11/2020 08:05 PM

லண்டன், இங்கிலாந்து, 22 நவம்பர் (பெர்னாமா) -- இங்கிலாந்து, லண்டனில் நடைபெற்று வரும் ஏ.டி.பி தொடர் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி சுற்றில், உலகின் முதல் நிலை ஆட்டக்காரர் நோவக் ஜோக்கோவிச் மற்றும் இரண்டாம் நிலை ஆட்டக்காரர் ரஃபேல் நடால் ஆகிய இருவருமே, தோல்வி கண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன்ர்.

அவ்விரு முண்ணனி ஆட்டக்காரர்களும் இறுதி ஆட்டத்தில் களம் காண்பார்கள் என்று பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட நிலையில், இந்த தோல்வி ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், செர்பியாவின் நோவக் ஜோக்கோவிச், ஆஸ்திரியாவின் டோமினிக் தீம்மைச் சந்தித்து விளையாடினார்.

கடும் போராட்டத்திற்குப் பின்னர், 7-5, 6-7,7-6 என்ற புள்ளிகளில், டோமினிக் தீம், வெற்றிப் பெற்று இறுதி ஆட்டத்திற்கு முன்னேறி இருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து, இன்று அதிகாலை நடைபெற்ற மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில், ஸ்பெனின் ரஃபேல் நடாலைச் சந்தித்து விளையாடிய, ரஷ்யாவின் டெனில் மெட்விடிவ், 3-6, 7-6, 6-3  என்ற புள்ளிகளில் வெற்றிப் பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார்.

நாளை நடைபெறவிருக்கும் இறுதி ஆட்டத்தில், உலகின் நான்காம் நிலை ஆட்டக்காரருமான டெனில் மெட்விடிவ், உலகின் மூன்றாம் நிலை ஆட்டக்காரர்  டோமினிக் தீம்மைச் சந்திப்பார்.

-- பெர்னாமா