பொது

இயங்கலை வழி மக்களவை கூட்டத்திற்கான பரிந்துரையை அரசாங்கம் ஆராய்கிறது

05/11/2020 04:51 PM

கோலாலம்பூர், 05 நவம்பர் (பெர்னாமா) -- கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இயங்கலை வழி மக்களவை கூட்டத்தை நடத்தும் பரிந்துரையை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.

இவ்விவகாரம் கூட்ட விதிமுறைகளில் இடம் பெறவில்லை என்றாலும் நடைமுறை விதிகளில் திருத்தம் செய்வதால் அதனை அமல்படுத்த முடியும் என்று பிரதமர் துறையின் நாடாளுமன்றம் மற்றும் சட்டத்திற்கான அமைச்சர் டத்தோ தக்கியுடீன் ஹசான் தெரிவித்திருக்கிறார்.

முன்னதாகக், கொவிட்-19 பரவலுக்கு மத்தியில் மக்களவை கூட்டம் பாதுகாப்புடன் நடைபெறுவதை உறுதி செய்ய சில கூட்ட விதிகளின் அமலாக்கத்தை நிறுத்தும் தீர்மானத்தை டத்தோ தக்கியுடீன் ஹசான் முன்வைத்தார்.

--பெர்னாமா