பொது

பெஜுவாங்கின் பதிவு விண்ணப்பம் இன்னும் ஆராயப்பட்டு வருகிறது

30/10/2020 07:57 PM

கோலாலம்பூர், 30 அக்டோபர் (பெர்னாமா) -- பெஜுவாங் கட்சியின் பதிவு விண்ணப்பம் இன்னும் ஆராயப்பட்டு வருகிறது.

தனது மின்னியல் பதிவு செயல்முறையில் நேற்று வரையில், அக்கட்சியின் பதிவு விண்ணப்பம் நிறைவுப்பெறவில்லை என்று சங்கங்களின் பதிவு இலாகா, ஆர்.ஓ.எஸ் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

இவ்விவகாரத்திற்கு தீர்வுக் காண ஆர்.ஓ.எஸ்-சிடம் நேரடியாக தொடர்பு கொள்ளுமாறு பெஜுவாங் கட்சியின் ஆதரவு செயல்குழு தரப்பினர் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றனர்.

இந்நிலையில், 1966-ஆம் ஆண்டு அமைப்புகளின் சட்டத்தின் கீழ், அக்கட்சி பதிவுச் செய்யும் வரையில், அதன் அடையாளம், சின்னம் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது என்றும் அதன் தரப்பினரை ஆர்.ஓ.எஸ் வலியுறுத்தி இருக்கிறது.

இதனிடையே, பதிவு விண்ணப்பம் அனுப்பப்பட்ட இரண்டு மாதங்களாகியும், அவ்விண்ண்ப்பம் இன்னும் அங்கீகரிக்கப்படாமல் நிலுவையில் இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டையும் ஆர்.ஓ.எஸ் மறுத்திருக்கிறது.

-- பெர்னாமா