பொது

கொவிட்19: எண்மர் மரணம், 801 புதிய சம்பவங்கள் பதிவு

28/10/2020 06:39 PM

புத்ராஜெயா, 28 அக்டோபர் (பெர்னாமா) -- கொவிட்-19 நோயினால் நாட்டில் மேலும் எட்டு மரண சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு அப்பெருந்தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 246-ஆக அதிகரித்திருக்கிறது.

இந்நிலையில், இன்று நண்பகல், 12 மணி வரையில், 801 புதிய சம்பவங்கள் பதிவாகி இருப்பதாகச் சுகாதாரத் தலைமை இயக்குநர் டான் ஶ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா  தெரிவித்திருக்கிறார்.

நாட்டில் இன்று பதிவு செய்யப்பட்ட சம்பவங்களில், 799 சம்பவங்கள் உள்நாட்டில் பரவியது என்றும் இரண்டு சம்பவங்கள் வெளிநாட்டில் இருந்து பரவியது என்றும் டாக்டர் நோர் ஹிஷாம் கூறினார்.

அதோடு, மேலும் நான்கு புதிய நோய்த் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். இன்று மேலும் 573 பேர் இந்நோயிலிருந்து குணமடைந்திருக்கின்றனர்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் 94 பேரில் 25 பேருக்குச் சுவாச உதவிக் கருவி பொருத்தப்பட்டிருக்கிறது.

-- பெர்னாமா