புத்ராஜெயா, 25 அக்டோபர் (பெர்னாமா) -- நாட்டில், நேற்று, சனிக்கிழமை, நான்கு இலக்கமாக பதிவு செய்யப்பட்ட புதிய கொவிட்-19 நோய்ச் சம்பவங்களின் எண்ணிக்கை இன்று, மீண்டும் மூன்று இலக்கத்திற்கு திரும்பியுள்ளது.
இன்று 823 புதிய கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகி இருப்பதைத் தொடர்ந்து இந்நோய்க் கண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26 ஆயிரத்து 565ஆக அதிகரித்திருக்கிறது.
நாட்டில் இன்று பதிவு செய்யப்பட்ட அனைத்து 823 கொவிட்-19 நோய்ச் சம்பவங்களும் உள்நாட்டில் பரவியதாகும்.
அதோடு, மேலும் ஒன்பது புதிய நோய்த் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.
இன்று மேலும் 579 பேர் இந்நோயிலிருந்து குணமடைந்திருக்கின்றனர்.
அதோடு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வரும் 99 பேரில் 30 பேருக்கு சுவாச உதவிக் கருவி பொருத்தப்பட்டிருக்கிறது.
-- பெர்னாமா
© 2024 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை