குவாந்தான், 23 அக்டோபர் (பெர்னாமா) -- பிரதமர் டான் ஶ்ரீ முகிடின் யாசினை ஏற்றி வந்த வாகனம், இன்று இரவு 7.10 மணியளவில், அப்துல்அசிஸ் அரண்மனை வளாகத்தை விட்டு வெளியேறியது.
முன்னதாக மாலை 4.40 மணியளவில் மாட்சிமை தங்கிய மாமன்னர், அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா-வை சந்திக்கச் சென்ற பிரதமர் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அங்கிருந்ததாக கூறப்பட்டிருக்கிறது.
இராணுவப் படை தளபதி, ஜெனரல் டான் ஶ்ரீ அப்பென்டி புவாங்-கும் அவருடன் சென்று மாமன்னரைச் சந்தித்திருக்கிறார்.
பகாங் மாநில அதிகாரப்பூர்வ வாகனங்களும் அங்கு சென்றிருந்ததைக் காண முடிந்தாலும், அதில் பயணித்தவர்கள் குறித்த விவரங்கள் உறுதிப்படுத்த இயலவில்லை.
பிரதமரை ஏற்றிச் சென்ற வாகனம் பின்னர், குவாந்தான் ஆகாயப் படையின் தளத்திற்கு சென்றதாகவும், அங்கிருந்து அவர் விமானம் மூலம் கோலாலம்பூர் திரும்பியிருக்கிறார்.
-- பெர்னாமா
© 2024 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை