BREAKING NEWS | Former inspector general of police (IGP) Tun Mohammed Hanif Omar died at 2.15 am today - Son | Bekas Ketua Polis Negara (KPN) Tun Mohammed Hanif Omar meninggal dunia pada 2.15 pagi tadi - Anak | |
சிரம்பான், 23 அக்டோபர் (பெர்னாமா) -- கொவிட்-19 நோய் காரணமாக நாடு முழுவதும் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் சரஸ்வதி பூஜை மிதமான அளவிலேயே கொண்டாடப் பட்டது.
இதில், நெகிரி செம்பிலான் சிரம்பானில் உள்ள பண்டார் ஸ்ரீ செண்டாயன் தமிழ்ப்பள்ளி மற்றும் பஹாங் ரவுப் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்களும் ஆசிரியர்களும் மகிழ்ச்சியான முறையில் சரஸ்வதி பூஜையைக் கொண்டாடினர்.
இம்முறை சரஸ்வதி பூஜை மிதமான அளவில் கொண்டாடப்பட்டாலும், இந்நாளின் முக்கியதுவம் குறித்து மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டதாக பண்டார் ஸ்ரீ செண்டாயன் தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி வாசுதேவன் தெரிவித்தார்.
''இவ்வாண்டு ஒரு வகுப்பறையில் அழங்கரிக்கப்பட்டு இந்த சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டது. ஒரு சில மாணவர்கள் தேவாரம் பாடியதோடு, இன்னும் சில மாணவர்கள் பூக்கள் வைத்து வழிப்பாடு செய்தனர். அனைத்தும் எஸ்.ஓ.பி பின்பற்றி பூஜை செய்யப்பட்டது'' என்று அவர் கூறினார்.
அதோடு, செயல்பாட்டு தர விதிமுறையான எஸ்.ஓ.பி யை பின்பற்றி புதிய இயல்பு முறையில் இந்த சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டதாக அப்பள்ளியின் துணை தலைமை ஆசிரியர் ஜெகநாதன் கணேசன் கூறினார்.
மற்றொரு நிலவரத்தில், பகாங், ரவுப் தமிழ்ப்பள்ளியில் குறைவான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் இவ்வாண்டு சரஸ்வதி பூஜை சிறிய அளவிளே கொண்டாடப்பட்டது.
''இவ்வாண்டு சரஸ்வதி பூஜை மிதமான அளவிலே கொண்டாடப்பட்டது. அதிலும் கொவிட்-19 காரணமாக சரஸ்வதி பூஜை எஸ்.ஓ.பி பினபற்றி நடைப்பெற்றது.'' என்று கூறினார்.
இதனிடையே, சமயத்திற்கு முக்கியதுவம் வழங்கப்பட்டாலும், எஸ்.ஓ.பியை பின்பற்றி வழிப்பாடு செய்வது சிறந்தது என்று தலைமை ஆசிரியர் தமிழ்வாணன் குறிப்பிட்டார்.
--பெர்னாமா
© 2024 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை