விளையாட்டு

டென்மார்க் பொது பூப்பந்து போட்டி: அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறத் தவறினார் கிடாம்பி

17/10/2020 07:23 PM

ஒடென்ஸ், 17 அக்டோபர் (பெர்னாமா) -- இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான கிடாம்பி ஶ்ரீகாந்த், டென்மார்க் பொது பூப்பந்து போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறத் தவறி இருக்கிறார்.

டென்மார்க், ஒடென்ஸ் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற காலிறுதி சுற்றில்,கிடாம்பி ஶ்ரீகாந்த், உலகின் இரண்டாம் நிலை ஆட்டக்காரரான தைப்பேவின் சோவ் தியன் சென்-னை சந்தித்து விளையாடினார்.63 நிமிடங்கள் வரை நீடித்த இவ்வாட்டத்தில், ஶ்ரீகாந்த், 20-22, 21-13, 21-16 என்ற புள்ளிகளில், தியன் சென்னிடம் தோல்வி கண்டார்.

மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில், அமெரிக்காவின்பீவன் ஜாங்-குடன் விளையாடிய, ஒலிம்பிக் வெற்றியாளர் கெரோலினா மரின் 17-21, 21-17, 21-14 என்ற புள்ளிகளில், அரையிறுதி சுற்றுக்குத் தகுதிப் பெற்றிருக்கிறார்.

அடுத்து நடைபெறவிருக்கும் ஆட்டத்தில், கெரோலினா , டென்மார்க்கின் ஜூலி டேவால் ஜாகோப்சன்-னை 21-6, 21-12 என்ற நேரடி செட்களில் வீழ்த்திய ஜப்பானின் நோசுமி ஒக்குஹராவை சந்திப்பார்.

-- பெர்னாமா