சிறப்புச் செய்தி

பூச்சாண்டியை மீண்டும் நினைவுகூரும் 'பூச்சாண்டி வரான்' பாடல்

26/09/2020 09:20 PM

பிரிக்பீல்ட்ஸ், 26 செப்டம்பர் (பெர்னாமா) -- ஒரு படத்துக்கு பாடலும் அதன் இசையும் உயிர் நாடியாகும். 

அதிலும், சில திரைப்படத்தின் பாடல்களே, அப்படத்தை காண்பதற்கான எண்ணத்தைத் தூண்டிவிடும் என்பது மறுப்பதற்கில்லை. 

அந்த வகையில், சில ஆண்டுகளுக்கு முன்னதாக எழுதி, இயக்கி இன்னும் திரைக்கு வராத பூச்சாண்டி திரைப்படத்தை மீண்டும் நினைவு கூர்ந்துள்ளது 'பூச்சாண்டி வரான்' எனும் பாடல். 

சில வருடங்களுக்கு முன்பு இயக்கப்பட்ட பூச்சாண்டி திரைப்படம், சில உண்மை கூறுகள் ஆராய்ச்சிக்காகவும் கொவிட்-19 நோய் காரணமாகவும் திரை காணாமல் இருந்தது. 

இந்நிலையில், 2000 வருடங்களுக்கு முந்தைய இந்தியர்களின் வரலாற்றைக் கூறும் இத்திரைப்படம், பூச்சாண்டி வரான் எனும் பாடல் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் என்கிறார் அப்படத்தின் இயக்குநர் விக்னேஸ்வரன் களியபெருமாள். 

சில வருடங்களுக்கு முன்பு இயக்கப்பட்ட பூச்சாண்டி திரைப்படம், சில உண்மை கூறுகள் ஆராய்ச்சிக்காகவும் கொவிட்-19 நோய் காரணமாகவும் திரை காணாமல் இருந்தது. 

இந்நிலையில், 2000 வருடங்களுக்கு முந்தைய இந்தியர்களின் வரலாற்றைக் கூறும் இத்திரைப்படம், பூச்சாண்டி வரான் எனும் பாடல் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் என்கிறார் அப்படத்தின் இயக்குநர் விக்னேஸ்வரன் கலியபெருமாள்.

'இந்த படத்தில் உள்ள கருத்துகளை ஒரு கவிதையாக சொல்லும் முயற்சி தான் இது' என்று அவர் கூறினார்.

அதோடு, பூச்சாண்டி வரான் பாடலை உறுவாக்குவற்கு பல போரட்டங்களை எதிர்நோக்கியதாக பாடகர் கணேசன் மனோகரன் கூறினார். 

'எவ்வளவு கஷ்டங்களை கடந்து வந்தாலும், என் பாடலை திரையில் காணும் போது அனைத்து வலிகளும் மறைந்தன' 'என்று அவர் கூறினார்.

அதேவேளையில், மலேசிய இசை துறையில் இந்த பாடல் ஒரு மைல்கல்லாக அமையும் என்று, புகழ் பெற்ற HIPHOP பாடகர் யோகி பி என்றழைக்கப்படும் யோகேஸ்வரன் வீரசிங்கம் குறிப்பிட்டார். 

இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி, கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ், GSC NU SENTRAL--யில், நேற்று வெள்ளிக்கிழமை நடைப்பெற்றது.

இத்திரைப்படம், வரும் நவம்பர் 12-ஆம் தேதி தீபாவளி வெளியீடாக மலேசிய திரையரங்களில் வெளியாகும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. 

--பெர்னாமா