கொவிட்-19 பெருந்தொற்று காலக் கட்டத்திலும் சபா மாநில தேர்தலை மேற்கொள்ளவேண்டிய சூழல் ஏற்பட்டது நாடறிந்தது.
அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ள இம்மாநில தேர்தலின் பிரச்சாரங்கள் நடத்தப்பட்டு வருவதை ஊடகங்கள் வாயிலாக நாம் அறிந்து வருகிறோம்.
தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே எஞ்சி இருக்கின்ற வேளையில் இதையொட்டி பல அரசியல் அறிவிப்புகளும் ஆருடங்களும் வந்த வண்ணமாகவேதான் இருக்கின்றன.
சபா மாநில தேர்தல் நாட்டின் தற்போதைய அரசியல் சூழலை மாற்றி அமைக்குமா?
அது குறித்து தெரிந்து கொள்ள சபா மாநில தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் தேர்தல் சீர்திருத்த குழுவின் பார்வையாளர் டாக்டர் G.மணிமாறன் உடனான தொலைப்பேசி அழைப்பின் வழியான நேர்காணல்.
-- பெர்னாமா
© 2024 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை