ஸ்ட்ரெஹன் , 24 செப்டம்பர் (பெர்னாமா) -- ஆஸ்திரேலியா, தஸ்மானியா மாநிலத்தின் ஸ்ட்ரெஹன் கடற்கரையில் கரை ஒதுங்கி உயிரிழந்த திமிங்கலங்களின் எண்ணிக்கை 380 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கடந்த மூன்று நாட்களாக மேற்கொண்டு வரும் முயற்சியில் கரை ஒதுங்கிய 460 திமிங்கலங்களில் இதுவரை 50 திமிங்கலங்கள் மீண்டும் கடலில் விடப்பட்டுள்ளன. கடந்த 21-ம் தேதி திடீரென கரை ஒதுங்கிய பல திமிங்கலங்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீண்டும் கடலுக்கு செல்ல முடியாமல் தத்தளித்து வந்தன.
தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற ஆராய்ச்சியாளர்கள், தன்னார்வலர்கள் பலர் திமிங்கலங்களை மீண்டும் கடலுக்குள் விடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமிங்கலங்கள் கூட்டமாக செல்லும்போது, அவற்றை முன் நின்று அழைத்துச் செல்லும் தலைமை திமிங்கலங்கள் வழி தவறி அனைத்து திமிங்களையும் எதிர்ப்பாராத கரைப்பகுதிக்கு அழைத்து வந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
ஆயினும், மிகப்பெரிய கூட்டமாக 460 திமிங்களங்கள் ஒரே நேரத்தில் கரை ஒதுங்கியது ஆஸ்திரேலியாவில் மட்டுமல்லாமல் உலகிலேயே முதல் முறை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-பெர்னாமா
© 2024 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை