புத்ராஜெயா, 20 செப்டம்பர் (பெர்னாமா) -- பினாங்கில் ஆரா (ARA) எனும் புதிய தொற்றை சுகாதார அமைச்சு அடையாளம் கண்டிருக்கிறது.
இத்தொற்றில், இதுவரை இரண்டு சம்பவங்கள் பதிவாகி இருக்கின்றன. அதேவளையில், நாட்டில் இன்று நண்பகல் 12 மணி வரையில், பதிவு செய்யப்பட்ட 52 புதிய சம்பவங்களில், 40 சம்பவங்கள் உள்நாட்டில் பரவியதாகும் என்று சுகாதாரத் தலைமை இயக்குநர் டான் ஶ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்திருக்கிறார்.
உள்நாட்டில் பரவிய சம்பவங்களில், 36 சம்பவங்கள் சபாவில் பதிவாகி இருக்கிறது.
எஞ்சிய நான்கு சம்பவங்கள், கெடாவில் மூன்று சம்பவங்களும், பினாங்கு ஒரு சம்பவமும் பதிவாகி இருப்பதாக, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், டாக்டர் நோர் ஹிஷாம் குறிப்பிட்டார்.
இன்று 40 பேர் இந்நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றனர். அதோடு இந்நோயினால், எந்தவொரு மரணச் சம்பவமும் பதிவாகாத நிலையில், மொத்த மரண எண்ணிக்கை 120-ஆக நீடிக்கிறது.
-- பெர்னாமா
© 2024 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை