பொது

சபாவின் சட்டமன்றத் தேர்தல் செப்டம்பர் 26 - எஸ்.பி.ஆர்

17/08/2020 08:06 PM

சபா, 17 ஆகஸ்ட் (பெர்னாமா) -- சபா மாநிலத்தின் 16-வது சட்டமன்றத் தேர்தல், செப்டம்பர் 26-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் பொறுப்பாண்மைக்குழு எஸ்.பி.ஆர் அறிவித்துள்ளது. 

செப்டம்பர் 12-ஆம் தேதியன்று வேட்பு மனு தாக்கல் நடைபெறும் வேளையில், 22-ஆம் தேதியன்று முன்கூட்டியே வாக்களிப்பு நடைபெறும் என்று எஸ்.பி.ஆர்-இன் துணைத் தலைவர் டாக்டர் அஸ்மி ஷாரோம் தெரிவித்திருக்கிறார். 

வேட்புமனு தாக்கல் நடைபெற்று முடிந்த பின்னர் அடுத்த 14 நாட்களுக்கு அதாவது செப்டம்பர் 26ஆம் தேதி இரவு 11.59 மணி வரையில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ளலாம் என்றும் டாக்டர் அஸ்மி ஷாரோம் குறிப்பிட்டார். 

இன்று திங்கட்கிழமை ச்பா, கோத்தா கினாபாலுவில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார். 

சபா மாநில சட்டமன்ற இடைத்தேர்தலின் போது வாக்களிப்பதற்கு கூடுதலாக முப்பது நிமிடங்கள் வழங்கப்பட்டு, காலை 7.30 மணிக்குத் தொடங்கும் வாக்களிப்பு மாலை 5 மணி நீடிக்கும் என்று டாக்டர் அஸ்மி கூறினார். 

-- பெர்னாமா