அரசியல்

மகாதீரின் புதிய கட்சி பெஜுவாங்

12/08/2020 10:04 PM

கோலாலம்பூர், 12 ஆகஸ்ட் (பெர்னாமா) -- தாம் புதிதாக தொடங்கியிருக்கும் அரசியல் கட்சிக்கும், துன் டாக்டர் மகாதீர் முகமது, பெஜுவாங் என்று பெயரிட்டிருக்கிறார். 

விழிப்புணர்வு மற்றும் சமூகத்தை அழித்துவரும் ஊழலை ஒழிப்பதற்கும் இந்த புதிய கட்சி அமைக்கப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் தெரிவித்திருக்கிறார். 

தமது முகநூல் மற்றும் டுவிட்டர் பதிவில், கவிதை வடிவில். அப்புதிய கட்சியின் பெயரை டாக்டர் மகாதீர் குறிப்பிட்டிருக்கிறார். 

பெயரிடப்படாத புதிய கட்சியை தாம் அமைப்பதாக, கடந்த ஆகஸ்ட் ஏழாம் தேதி முன்னாள் பிரதமரும், பெர்சத்து கட்சியின் முன்னாள் தலைவருமான டாக்டர் மகாதீர் அறிவித்திருந்தார். 

ஆனால், அக்கட்சி PERIKATAN NASIONAL அல்லது நம்பிக்கைக் கூட்டணியில் இணைவது அல்லது ஆதரிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளாது என்றும் அவர் திட்டவட்டமாக கூறியிருக்கிறார். 

இப்புதிய கட்சிக்கு டத்தோ ஶ்ரீ முக்ரிஸ் மகாதீர் தலைவராக இருப்பார் என்றும் அவர் தெரிவித்தார். 

வரும் ஆகஸ்ட் 29-ஆம் அதேதி நடைபெறவிருக்கும், சிலிம் சட்டமன்ற இடைத் தேர்தலில், சுயேற்சை அடிப்படையில் போட்டியிடவிருப்பதாகவும் டாக்டர் மகாதீர் அறிவித்திருக்கிறார். 

-- பெர்னாமா