பொது

அல்-ஜன்னா சூராவ் உடனடியாக மூடப்படுகிறது

07/08/2020 09:39 PM

ஷா ஆலம், 7 ஆகஸ்ட் (பெர்னாமா) -- சிலாங்கூர், ஷா ஆலம், செக்‌ஷன் 23-றில் இருக்கும் அல்-ஜன்னா சூராவ் உடனடியாக மூடப்படுகிறது.

அங்குள்ள ஒருவர், சிவகங்கை தொற்றுடன் தொடர்புடைய நபருடன், நெருங்கிய தொடர்பில் இருந்ததால், சம்பந்தப்பட்ட  சூராவ்-வை மூடுவதாக, சிலாங்கூர் மாநில இஸ்லாமிய இலாகா, JAIS கூறியிருக்கிறது.

அதோடு, அந்த சூராவ் அருகே இருக்கும் அல்-ஜன்னா சமயப்பள்ளியும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

அதன், சுற்று வட்டார மக்களிடையே அப்பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்திற்காக, சம்பந்தப்பட்ட சூராவ்-வில் எந்தவொரு வழிபாட்டு தொழுகைகளும் நடத்தப்படாது என்று JAIS இயக்குநர் முஹமட் ஷாஸிஹான் அஹமட் தெரிவித்தார்.

இந்நிலையில், அப்பகுதியில் தற்போது கிருமி நாசினி தெளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா