ஜகார்த்தா, 7 ஜூலை (பெர்னாமா) - இந்தோனேசியாவிலும் கொவிட்-19 பெருந்தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த 24 மணிநேரத்தில் அங்கு 1,268 புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதன்மூலம் அந்நாட்டில் 66,226 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இன்று நண்பகல் 12 மணிவரையில் அதாவது 24 மணிநேரத்தில் 68 மரணச் சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் இதுவரை இப்பெருந்தொற்றால் அந்நாட்டில் 3,309 பேர் மரணமடைந்துள்ளதாக இந்தோனேசிய அரசாங்கத் செய்தித் தொடர்பாளர் அக்மத் யூரியான்டோ தெரிவித்தார்.
இதனிடையே, இன்னும் 13,471 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பேரிடர் மேலாண்மைக்கான தேசிய நிறுவனத்தின் யூடியூப் (YOU TUBE) வலையொளியில் அவர் இன்று குறிப்பிட்டார்.
- பெர்னாமா
© 2024 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை