புத்ராஜெயா, 13 ஜூன் (பெர்னாமா) -- திருமண நிகழ்ச்சிகள் தொடர்பான தொழிற்துறைகள், தேசிய பாதுகாப்பு மன்றம் மற்றும் சுகாதார அமைச்சுடன் பேச்சு நடத்திய பின்னரே மீண்டும் இயங்கத் தொடங்கும்.
எனினும், அத்தொழில்துறையில் ஈடுபடுபவர்களிடமிருந்து, அத்துறை இயங்குவதற்கு ஏற்ற செயல்பாட்டு தர விதிமுறை குறித்த ஆலோசனையைக் கேட்க அரசாங்கம் தயாராக இருப்பதாக டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்திருக்கிறார்.
கடந்த மார்ச் 18-ஆம் தேதி, நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு, பிகேபி அமல்படுத்தத் தொடங்கியது முதல், பல்வேறு துறைகளும் தொழில்துறைகளும் நஷ்டத்தை எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
-- பெர்னாமா
© 2024 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை