BREAKING NEWS   Helicopter crash tragedy affects families of Malaysian Armed Forces, a big loss to the nation - PM Anwar | RMN helicopter crash: PM Anwar expresses condolences, prays the victims' families be given strength in time of tragedy | Tragedi helikopter terhempas beri kesan kepada keluarga Angkatan Tentera Malaysia, kehilangan besar buat negara - PM Anwar | Agong saddened by RMN helicopter crash in Lumut, sends his condolences to victims' families | Tragedi helikopter terhempas beri kesan kepada keluarga Angkatan Tentera Malaysia, kehilangan besar buat negara - PM Anwar | 
உலகம்

கொவிட்-19 : சிங்கப்பூரில் 544 புதிய சம்பவங்கள்

02/06/2020 08:45 PM

சிங்கப்பூர், 2 ஜூன் (பெர்னாமா) -- இன்று முதல் கட்டமாக, தனது பொருளாதரத்தை மீண்டும் திறந்திருக்கும் சிங்கப்பூரில், 544 புதிய கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகி இருக்கின்றன. 

இன்று மதியம் 12 மணி வரையில் பதிவுச் செய்யப்பட்ட எண்ணிக்கையில்,4 சம்பவங்கள் மட்டுமே உள்நாட்டினரை உட்படுத்தியதாகும் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்திருக்கிறது. 

திங்கட்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, சிங்கப்பூரில் 1,685 சமூகம் தொடர்பிலான சம்பவங்களும், 580 வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை உட்படுத்திய சம்பவங்களும் , 33,027 அந்நியத் தொழிலாளிகள் தங்குமிடத்தை உட்படுத்திய சம்பவங்களாகும். 

இதுவரையில் அந்நாட்டில் மொத்தம் 35,836 பேருக்கு கொவிட்-19 நோய் தொற்றியிருக்கிறது. 

இதில் 64 விழுகாடு அதாவது 22,466 பேர் முழுமையாக குணமடைந்திருக்கின்றனர். 

தற்போது, கொவிட்-19 நோய் தொற்றி இருப்பது உறுதிச் செய்யப்பட்டு, உடல் சுகாதார ரீதியில் குணமாக இருக்கும் 12,458 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு கூறியிருக்கிறது. 

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் 344 பேரில், ஏழுவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். 

-- பெர்னாமா