பொது

இரவுச் சந்தையைத் திறப்பதற்கான எஸ்ஓபி சனிக்கிழமை சமர்ப்பிக்கப்படும்

02/06/2020 09:53 PM

புத்ராஜெயா,  2 ஜூன் (பெர்னாமா) -- இரவுச் சந்தை திறப்பது தொடர்பான செயல்பாட்டு தர விதிமுறை, எஸ்ஓபி-யை தேசிய பாதுகாப்பு மன்றம் சனிக்கிழமை நடத்தப்படும் கூட்டத்தில் சமர்பிக்கப்படவிருக்கிறது.

தொழுகை மற்றும் முடி திருத்தக் கடைகளுக்கான எஸ்ஓபி குறித்தும் இக்கூட்டத்தில் சமர்பிக்கப்படவிருப்பதாக தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்திருக்கிறார்.

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு தொடர்பான 30ஆம் நாள் செய்தியாளர்கள் சந்திப்பில் இஸ்மாயில் சப்ரி இவ்வாறு தெரிவித்தார்.

-- பெர்னாமா