பொது

14 நாட்களுக்குப் பிரதமர் தனிமைப்படுத்தப்படுவார்

22/05/2020 07:29 PM

புத்ராஜெயா, 22 மே (பெர்னாமா) -- இன்று, வெள்ளிக்கிழமை மாலைத் தொடங்கி அடுத்த 14 நாட்களுக்கு பிரதமர் டான் ஶ்ரீ முகிடின் யாசின் தனிமைப்படுத்தப்படுவார்.

கடந்த புதன்கிழமை பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரி ஒருவருக்கு கொவிட்-19 நோய் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமரும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்ட ஓர் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்திருந்தது.

இருப்பினும், இன்று காலை பிரதமருக்கு மேற்கொண்ட கொவிட்-19 நோய் பரிசோதனையில் அவருக்கு இந்நோய்த் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.