இங்கிலாந்து, 07 ஏப்ரல் (பெர்னாமா) -- கொவிட்-19 நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.
கொவிட்-19 நோய் மோசமடைந்திருக்கும் அவர், தற்போது சுயநினைவுடன் இருப்பதாக, பிரதமர் அலுவலகம் கூறியிருக்கிறது.
55 வயதுடைய ஜான்சனுக்கு, கடந்த மார்ச் 27-ஆம் தேதி கொவிட்-19 நோய் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, தமது இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
எனினும், அவரின் நிலைமை தொடர்ந்து மோசமடைந்ததால், ஞாயிற்றுக்கிழமை இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதனிடையே, இங்கிலாந்தில், கொவிட்-19 நோய்க்கு இதுவரை 51 ஆயிரத்து 608 பேர் பாதிக்கப்பட்டிருப்பதோடு, 5 ஆயிரத்து 373 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
-- பெர்னாமா
© 2024 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை