சிப்பாங், 26 மார்ச் [பெர்னாமா] -- கொவிட்-19-தினால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும் இத்தாலியிலிருந்து 81 மலேசியர்களும் அவர்களின் பராமரிப்பில் இருப்பவர்களும் இன்று வியாழக்கிழமை பாதுகாப்புடன் நாடு திரும்பினர்.
இவர்களை ஏற்றி வந்த ஏர் ஆசியாவின் சிறப்பு விமானம் காலை 10 மணிக்குக் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்ததாக, துணை வெளியுறவு அமைச்சர் டத்தோ கமாருடின் ஜப்பார் தெரிவித்தார்.
இவர்கள் அனைவரும் தலைமைத்துவ உயர் கல்வி கழகமான ஏகெப்ட்-டில் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
-- பெர்னாமா
© 2024 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை