கோலாலம்பூர், 24 பிப்ரவரி [பெர்னாமா] -- நாட்டு அரசியல் நிலவரம் தொடர்பில், கெஅடிலான் தலைவர்களும் ஜசெக தலைவர்களும், இரு வெவ்வேறு இடங்களில் தற்போது சந்திப்பு நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
கெஅடிலான், சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவில் உள்ள தனது கட்சித் தலைமையகத்திலும், ஜசெக, கோலாலம்பூர், ஜாலான் புடுவில் உள்ள தனது கட்சித் தலைமையகத்திலும் கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றன.
இச்சந்திப்புக்குப் பின்னர் அக்கட்சியின் தலைவர்கள் ஒன்றாகச் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு, பிற்பகல் இரண்டு மணியளவில், துணைப் பிரதமர் டத்தோஶ்ரீவான் அசிசா வான் இஸ்மையிலும் அவரின் கணவரும் கெஅடிலான் தலைவருமான டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமும் மாட்சிமைத் தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாயாதுடின் அல்-முஸ்தாபா பில்லா ஷாவை இஸ்தானா நெகாராவில் சந்திக்க விருப்பதாகக் கூறப்படுகிறது.
-- பெர்னாமா
© 2024 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை