பொது

குணசேகரனும் பாலமுருகனும் விடுதலை

24/02/2020 12:44 PM

கோலாலம்பூர், 24 பிப்ரவரி [பெர்னாமா] -- தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவளித்ததாக இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த நெகிரி செம்பிலான், சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி. குணசேகரன் இன்று விடுதலை செய்யப்பட்டார்.

டாக்சி ஓட்டுநர் வி. பாலமுருகனும் இன்று காலையில் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர்.

குணசேகரனை விடுதலைச் செய்யுமாறு கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதிகள் டத்தோ முஹமட் ஜமில் உசேனும் முஹமட் நஸ்லான் முஹமட் கசாலியும் உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இதேபோல், உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பாலமுருகனும் இன்று விடுதலை செய்யபப்ட்டிருக்கின்றார்.

இந்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டுக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கும் எஞ்சிய 10 பேரும் இன்று விடுதலைச் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எஞ்சிய 10 பேரும் இன்று விடுதலைச் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-- பெர்னாமா