விளையாட்டு

20 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய ஹாக்கி குழுவில் இருந்து கோல் காவலர் எஸ்.குமார் விலகல்

21/02/2020 08:09 PM

கோலாலம்பூர், 21 பிப்ரவரி [பெர்னாமா] -- 20 ஆண்டுகளுக்குப் பிறகு, தேசிய ஹாக்கி குழுவில் இருந்து விலகுவதாக, அதன் கோல் காவலர் எஸ்.குமார் அறிவித்திருக்கிறார்.

1999-ஆம் ஆண்டு நடைபெற்ற புரூணை சீ விளையாட்டு போட்டியில் இருந்து, 
மலேசியாவை பிரதிநிதித்து, விளையாடி வரும் இவர், பல அனைத்துலக ஹாக்கி போட்டிகளில் பங்கேற்றவர் ஆவார். வருத்தத்தை அளித்தாலும், புதிய முகங்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தாம் இம்முடிவை எடுத்ததாக, எஸ்.குமார் கூறினார்.

பல அனைத்துலக போட்டிகளில் விளையாடி இருந்தாலும், ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் வாய்ப்பு தமக்கு கிடைக்காமல் போனதை எண்ணி, 40 வயதான குமார் வருத்தம் தெரிவித்திருக்கிறார். நாட்டின் மிகச் சிறந்த ஹாக்கி கோல் காவலர் என்று கூறப்பட்ட இவர், அனைத்துலக அளவிலும்  சிறந்த ஹாக்கி கோல் காவலர் பட்டியலில் இடம் பெற்றிருந்தார்.

-- பெர்னாமா