விளையாட்டு

பரதன் கிண்ணம்: கெடா வீழ்ந்தது, கோலாலம்பூர் வென்றது

15/02/2020 07:29 PM

செலாயாங், 15 பிப்ரவரி [பெர்னாமா] -- மலேசிய இந்தியர் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற 60-வது பரதன் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இறுதியாட்டத்தில், கெடா, 4-2 என்ற கோல்களில் கோலாலம்பூரிடம் தோல்வி கண்டது.

30 ஆண்டுகளுக்குப் பிறகு, இறுதியாட்டத்திற்குத் தேர்வாகி, கிண்ணத்தை வென்றாக வேண்டும் என்ற கெடாவின் ஆசை, நிராசையாகிப் போனது.

சிலாங்கூர், செலாயாங் நகராண்மைக் கழக அரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வெற்றிப் பெற வேண்டும் என்ற வேட்கையில் இரு குழுக்களுமே களமிறங்கின.\

கோல் போட வேண்டும் என்று இரு குழுக்களுமே பல முறை முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், முதல் பாதி ஆட்டம் கோல்களின்றி முடிவுற்றது.

விருவிருப்பாகத் தொடங்கிய இரண்டாம் பாதி ஆட்டத்தின், 73-வது நிமிடத்தில் கிடைத்த பினால்டி வாய்ப்பை, கெடா நழுவவிட்டது.

கோல் போடும் முயற்களில் இரு குழுக்களும் தோல்விக் கண்டு முழுப் பாதியாட்டமும் கோல்களின்றி முடிவுற்றதால், வெற்றியாளரைத் தீர்மானிக்கக் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

அந்த 30 நிமிடங்களிலும், கோல்கள் ஏதும் போடப்படாததால், வெற்றியாளரைத் தீர்மானிக்க, இரு குழுக்களுக்கும் தலா ஐந்து பினால்டிகள் வழங்கப்பட்டன.

இதில், 4-2 என்ற கோல்கள் எண்ணிக்கையில் கோலாலம்பூர் வெற்றிப் பெற்று, 20 ரிங்கிட்டையும் வெற்றிக் கிண்ணத்தையும் வென்றது.

-- பெர்னாமா