அரசியல்

எதிர் கட்சிகள் தங்களின் ஆதரவை வழங்குவதில் எனக்கு ஆட்சேபனை எதுவும் இல்லை - பிரதமர்

06/02/2020 08:21 PM

புத்ராஜெயா, 06 பிப்ரவரி (பெர்னாமா) -- எதிர் கட்சிகளான அம்னோ-வும் பாஸ்-சும், நாடாளுமன்றத்தில் தங்களின் ஆதரவை வழங்குவதில் தமக்கு ஆட்சேபனை எதுவும் இல்லை என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்திருக்கிறார். 



அவ்விரு கட்சிகளும் பிரதமருடன் ஒத்துழைக்க எண்ணம் கொண்டிருப்பதாக பரவலாக பேசப்படும் வதந்தி குறித்து கேள்வி எழுப்பப் பட்டபோது, டாக்டர் மகாதீர் இவ்வாறு கருத்துரைத்தார்.

 

"ஆமாம், அவர்கள் அவ்வாறுதான் கூறியிருக்கிறார்கள். அம்னோ, பாஸ்சும் கூட என்னுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறது. நீங்கள் என்னுடன் பணியாற்ற விரும்பினால், ஆதரவு மட்டும் வழங்குங்கள் என்று நான் கூறிவிட்டேன். நாடாளுமன்றத்தில் நாங்கள் சரியானதைச் செய்தால் அவர்கள் ஆதரவு வழங்க வேண்டும். கண்மூடித்தனமாக எதிர்க்கக் கூடாது,'' என்று பிரதமர் கூறினார். 



பெர்சத்து கட்சித் தலைவர் துன் டாக்டர் மகாதீருடன், அம்னோ ஒத்துழைக்க வேண்டும் என்று கட்சி சந்திப்பின் போது, அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் சாயிட் ஹமிடி தெரிவித்திருந்ததாக முன்னதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. 



-- பெர்னாமா