உலகம்

கொரோனா கிருமி தொற்று நோய்க்கு சீனாவில் 563 பேர் பலி

06/02/2020 08:13 PM

வுஹான், 06 பிப்ரவரி (பெர்னாமா) -- கொரோனா கிருமி தொற்று நோய்க்கு மேலும் 73 பேர் பலியாகியிருப்பதால், சீனாவில் இந்நோயினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 563-ரை எட்டியிருக்கிறது. 



மேலும், கடந்த 24 மணி நேரத்திற்குள், மூவாயிரத்து 694 புதிய கொரொனா கிருமி தொற்று நோய் சம்பவங்கள் பதிவாகியதைத் தொடர்ந்து, சீனாவில் அதன் எண்ணிக்கை 28,018-ஆக அதிகரித்திருக்கிறது. 



கொரோனா கிருமி தொற்று நோயினால், சீனாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில், 640 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக, சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்திருக்கிறது. 



மேலும், இந்நோய் கண்டிருக்கலாம் என்று நம்பப்படுவதால், மொத்தம் 24,702 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். 



இவர்களுடன் நேரடி தொடர்புடைய சுமார் இரண்டு லட்சத்து 82,813 பேர் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். 



தீவிர சிகிச்சைக்குப் பின்னர், இதுவரை 1,153 பேர் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். 



-- பெர்னாமா