விளையாட்டு

60-வது பரதன் கிண்ண காற்பந்துப் போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள்

31/01/2020 08:47 PM

கோலாலம்பூர், 31 ஜனவரி -- மலேசிய இந்தியர் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 60-வது பரதன் கிண்ண காற்பந்துப் போட்டியின் அரையிறுதி ஆட்டங்களில், கெடா, சிலாங்கூரைச் சந்திக்கும் வேளையில், கோலாலம்பூர் பினாங்கை சந்திக்க விருக்கின்றது.

 

நாளை சனிக்கிழமை, கெடா, கூலிம் காற்பந்து அரங்கில், பிற்பகல் நான்கு மணிக்கு நடைபெற விருக்கும் ஆட்டத்தில், கெடாவும் சிலாங்கூரும் மோதவிருக்கின்றன. 



இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை கோல சிலாங்கூரில் உள்ள காற்பந்து அரங்கில், பினாங்குடன் கோலாலம்பூர் மோதவிருக்கிறது. 



இந்த அரையிறுதி ஆட்டங்களைக் காண வருமாறு, அப்பகுதிகளில் உள்ள காற்பந்து ரசிகர்களை இப்போட்டியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் டத்தோ எஸ். பதி கேட்டுக் கொண்டார். 



இதில் வெற்றிப் பெறும் குழுக்கள், இறுதி ஆட்டத்தில் களம் இறங்கும்.

 
 

-- பெர்னாமா