புக்கிட் ஜாலில், 30 ஜனவரி -- 2020 மலேசிய ஹாக்கி கிண்ணப் போட்டியின் கடந்த ஐந்து ஆட்டங்களில் வெற்றியை பதிவுச் செய்த, தெனாகா நேஷனல் நிறுவனம், டிஎன்பி, புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில், மாரா தொழில்நுட்ப பல்கழைகம், யூஆய்டிஎம்-மிடம் 1-1 என்று சமநிலை கண்டது.
புக்கிட் ஜாலில், தேசிய ஹாக்கி அரங்கில் நடைபெற்ற இவ்வாட்டத்தில், 13 தேசிய விளையாட்டாளர்களுடன் டிஎன்பி களமிறங்கியது.
முதல் 15 நிமிடங்களில், ஆட்டம் கோல்கள் இன்றி தொடர, ஆட்டத்தின் முதல் கோலை போடும் வேட்கையில், டிஎன்பி தமது தாக்குதல்களை மேற்கொண்டது.
இருப்பினும், திறமையான தாக்குதலால், ஆட்டத்தின் 19-வது நிமிடத்தில் ஒரு கோலை போட்டு, யூஆய்டிஎம் முன்னிலை வகித்தது.
அதன் பிறகு, தொடர் தாக்குதல்களினால், ஆட்டத்தின் 39-வது நிமிடத்தில் டிஎன்பி ஒரு கோலை போட்டு ஆட்டத்தை சமப்படுத்தியது.
இரு குழுக்களின் தற்காப்பு அரண்கள் திறமையாக விளையாடியதால், ஆட்டம் 1-1 என்ற கோல் எண்ணிக்கையில் சமநிலையில் முடிவுற்றது.
-- பெர்னாமா
© 2024 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை